சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 'பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்' (Bharatiya Antariksh Station - BAS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முதல் தொகுதியான 'BAS-01', 2028-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஒட்டுமொத்த திட்டப்பணிகளும் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 400 முதல் 450 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மூன்று முதல் நான்கு விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





