இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23, இரண்டாம் கட்டம் ஏப்ரல் 29 நடைபெறும்.
இந்த 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
0Likes
0Dislikes
