உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர். ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில், மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்கள் அல்லது யுஜிசி சட்ட விதிகளின்படி அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் சேர்ந்து மாணவர்கள் ஏமாறாமல் இருக்க இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0Likes
0Dislikes
