கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய், கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், தமிழகத்தை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைநகராக மாற்றும் நோக்கில், மாநிலத்தில் ஏஐ நகரம் மற்றும் ஏஐ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு நலத்திட்டங்கள் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் சென்றடையும் என்றும், அனைத்து சேவைகளையும் மொபைல் மூலம் வழங்கும் "வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி" அறிமுகப்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கை உறுதி அளிக்கிறது.
பொதுமக்கள் அரசுக்கு தங்கள் யோசனைகளை முன்வைக்கலாம் என்றும், 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் அது சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
0Likes
2Dislikes
