சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட கால் இறுதி ஆட்டத்தில் நேற்று அட்லெடிகோ மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதின. மாட்ரிட் நகரில் உள்ள மெட்ரோ பொலிடானோ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் மாட்ரிட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற முதற்கட்ட கால் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இதனால் சராசரி கோல்விகிதப்படி அட்லெடிகோ மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஆன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு 2-வது கட்ட கால் இறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி, லிவர்பூல் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் உஸ்மான் டெம்பலே 72 மற்றும் 90+1-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். முதற்கட்ட கால் இறுதி ஆட்டத்திலும் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இதன் வாயிலாக சராசரி கோல்விகிதப்படி பிஎஸ்ஜி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.
0Likes
1Dislikes
