5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல்
கேரளம், அசாம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்; 3 மாநிலங்களிலும் இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் சட்டமன்ற தேர்தல்; ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மே 4ஆம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை; மொத்தம் 824 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படுகின்றன
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்; 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் கட்டாயம்
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றம்; மாநிலம்| முழுவதும் கண்காணிப்பு பணிகளைத் தொடங்கிய பறக்கும் படையினர்
வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வேண்டுகோள்; முதல்முறை வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற அழைப்பு
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கண்டிக்காமல் மனசாட்சியை அடகுவைத்துவிட்டார் பழனிசாமி; சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு ன் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | குற்றச்சாட்டு
கடந்த அதிமுக ஆட்சிதான் சிறுபான்மை மக்களின் பொற்காலம்; சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
கரூர் துயரம் தொடர்பான வழக்கில் சிபிஐ அலுவலகத்தில் 3ஆவது முறையாக ஆஜரானார் விஜய்; 7 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்
0Likes
0Dislikes
