காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட கருத்து, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பான சட்ட நெறிமுறைகளை மீறுவதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜூலை 27, 2026 அன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட நட்சத்திரமிடப்படாத கேள்வி எண் 876-க்கு, மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் அளித்த பதிலை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு அமையாத எந்தவொரு திட்டத்திற்கும் மத்திய அரசு நிர்வாக ரீதியிலான அனுமதியை வழங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி நதி பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் என்பதை வலியுறுத்தியுள்ள முதல்வர், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் மேலாண்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

