உயர்சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான 151 இடங்களை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அந்த இடங்களைச் சரணடையச் செய்வதை எதிர்க்க முடியாமல் போனதாக மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
1விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்

