தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 30 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக 157-வது வாக்குச்சாவடியில் உள்ள 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் உள்ள முகவரி சீட்டுகள் புதியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இயந்திரங்களில் ஒட்டப்பட வேண்டிய அரக்கு முத்திரைகள் (Wax Seal) முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், இயந்திரங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

