பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை முகநூலில் இருந்து நீக்கிய விவகாரம் தொடர்பாக, மத்திய அரசிடம் மெட்டா நிறுவன அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பிரதமர் உரையாற்றிய வீடியோ, முகநூலில் இருந்து சுமார் ஐந்து முதல் ஆறு மணி நேரம் நீக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிரபலங்களின் சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் உள்ள உள்ளடக்கங்களை நீக்கியது குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும் மத்திய அரசிடம் மன்னிப்பு கோரியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கங்கள் (CSAM), டீப்ஃபேக் (deepfake) எனப்படும் போலியான வீடியோக்கள் மற்றும் தளத்தை இயக்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவற்றுக்காக இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

