இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வரும் 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மூன்று கடுமையான புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த புயல்கள் உருவாகக்கூடும் என செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வானிலை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 44 ஆண்டுகளின் சராசரியை விட இந்த புயல்களின் வேகம் மற்றும் தாக்கம் மிகவும் வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த புயல்கள் அதிக அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவை என இஸ்ரோ சுட்டிக்காட்டியுள்ளது.
புயல்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, கடலோர மாவட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கனமழை மற்றும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



