பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, சங்க காலப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பிரதமர் மோடி அவருக்குப் பரிசாக வழங்கினார்.
மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து நிலைத்திருக்கும் ஞானத்தின் அடையாளமாக இந்த நூல் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிக்ஸ் இந்தியா 2026 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.



