நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் என சபரிவர்மன் கோரிக்கை விடுத்து சத்தமிட்டபோது, சிறை வார்டன் மற்றும் சக கைதிகள் அவரைத் தாக்கியுள்ளனர். சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு, கொடூரமாக அடித்துக் கொலை செய்ததை சிபிசிஐடி விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்



