மொராக்கோவிலிருந்து கடல் வழியாக ஸ்பெயினின் சியூட்டா நகருக்குள் சுமார் 70,000 அகதிகள் சட்டவிரோதமாக ஊடுருவியதைத் தொடர்ந்து, அந்நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவித்த அகதிகளில் 45,000-க்கும் மேற்பட்டோர் மீண்டும் கடலில் நீந்தி மொராக்கோவுக்கே திரும்பிச் சென்றனர். எஞ்சிய அகதிகள் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் படகுகள் மூலம் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இந்த ஊடுருவல் முயற்சியின்போது கடலில் மூழ்கி 67 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஸ்பெயின் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





