சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார். நீண்ட காலமாக இந்தப் பொறுப்பில் இருந்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவருக்குப் பதிலாக, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



