கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்து காவல்துறையிடம் தகவல் அளித்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே ஏற்கனவே இருந்த கோஷ்டி மோதல் காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த விளக்கத்திற்குப் பேரவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


