இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறும் 10வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், குருப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோதுகின்றன. 24 நாட்கள், 33 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 12ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்கிய இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குருப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குருப் பி-யில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் நல்ல பவுன்ஸ் மற்றும் வேகத்துடன் இருக்கும். இதனால் பெரிய ஷாட்கள் அடிக்க எளிதாக இருக்கும். அதேநேரத்தில், ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கும் என்பதால் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. பந்து பழையதாகும்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு க்ரிப் கிடைக்கலாம். முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 145 ரன்கள். இந்த மைதானத்தில் சேஸிங் செய்த அணிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன.
இதுவரை இரு அணிகளும் 16 டி20 சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 13 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 5 போட்டிகளில் இந்திய அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
0Likes
0Dislikes
