உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை டிஜிட்டல் தளங்களுடன் அதிகளவில் பிணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கல்வி மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு இணையதளங்கள் உதவியாக இருந்தாலும், அவை வேகம் மற்றும் தொடர்ச்சியான இணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. பாதுகாப்பான செயல்பாடுகளுக்கும், ஆபத்தான அனுபவங்களுக்கும் இடையிலான எல்லைகள் மங்கலாகி வருவதே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பல டிஜிட்டல் தளங்களின் வடிவமைப்பு முறைகளே இத்தகைய பாதிப்புகளுக்கு வழிவகுப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் இணையதளங்களில் நிலவும் பாதுகாப்பு சவால்களைக் களைவதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.




