பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், இரட்டை அர்த்தத்திலும் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களைப் பற்றித் தரக்குறைவாகவும் கண்ணியமற்ற முறையிலும் பேசுவதை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டம் தனது கடமையைச் செய்யும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
