பெண் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசுவதில் தமிழக வெற்றிக் கழகத்தினரும் ஈடுபடுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களைக் குறித்து யாரும் தவறாகப் பேசக்கூடாது என்றும், அவ்வாறு பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறிய கருத்தை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்தக் கருத்து அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.

