இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்தது. 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.
0Likes
0Dislikes
