முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதல்வன்" திட்டத்தின் சாதனைகளை மக்கள் மனதிலிருந்து அழிக்க முடியாது என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். "நீங்கள் நான் முதல்வன் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம், அதில் உள்ள பதிவுகளை நீக்கலாம். ஆனால், ஜெனிபர் போன்ற ஆயிரக்கணக்கானோரின் கனவுகளை நனவாக்கிய இத்திட்டத்தின் சாதனைகளையும், அதற்கான நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து நீக்கவே முடியாது. அவை அவர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் "படிங்க, படிங்க, படிங்க" என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், அவ்வாறு படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவவே "நான் முதல்வன்" என்ற தனது கனவுத் திட்டத்தைத் தொடங்கியதாகவும் ஸ்டாலின் கூறினார். இத்திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் செயல் என்றும் அவர் எச்சரித்தார்.
0Likes
0Dislikes
