தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கரப்பான் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார். வாஞ்சுக் மேற்கொண்ட உண்ணாவிரத முடிவிற்கும், தற்போதைய போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




