எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 25-லிருந்து 21-ஆக குறைக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். மக்கள் மன்றத்திலும் அரசாங்கத்திலும் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க இந்த மாற்றம் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தி, தெலங்கானா சட்டமன்றத்தில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
0Likes
0Dislikes


