தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003-ல் திருத்தங்களை மேற்கொண்டு தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, மதுபானக் கடைகளுக்கு அருகிலேயே பார்கள் இருக்க வேண்டும் என்றிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, இனி கடைகளுக்கு அருகிலோ அல்லது 100 மீட்டர் தொலைவிற்குள்ளோ பார்களை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விதி 10-ன் உட்பிரிவு (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பு 15-லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 15 சதுர மீட்டருக்கு மேல் உள்ள பார்களின் பரப்பளவை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் அடங்கிய அரசாணையில், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் கையெழுத்திட்டுள்ளார்.
0Likes
0Dislikes

