தமிழக வேளாண் பட்ஜெட் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து வழிபட்ட வேளாண் அமைச்சர் வினோத்தின் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதை அரசு மற்றும் அரசியலோடு இணைக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசு ஆவணத்தை கோயிலில் வைத்து வழிபட்டது அரசியல் சட்டத்திற்கும், மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களும் அரசும் இத்தகைய போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




