ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் ஜவுளி வியாபாரி சிவச்சரன் ராம் ரத்தன் குப்தா, உடல்நலக்குறைவால் காலமானார். நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் வசிக்கும் அவரது மூன்று மகள்களால் நேரில் வர முடியாத சூழலில், முதியோர் இல்ல நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இந்த நிகழ்வை மகள்கள் வீடியோ கால் மூலம் பார்த்து கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.
இறுதிச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய, அனிதா என்ற மகள் 5,100 ரூபாயை அனுப்பி வைத்தார். மேலும், அவரது தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு குடும்பத்தினர் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டனர்.
தனது மகள்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்காக உழைத்த குப்தா, தனது மறைவுக்குப் பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை முன்னரே தெரிவித்திருந்தார். அவரது விருப்பப்படியே குடும்பத்தினர் கண்களைத் தானம் செய்தனர். இறுதிச் சடங்கின் வீடியோ பதிவுகளைத் தருமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் மகள்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


