உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புச் சத்து குறித்த எச்சரிக்கை வாசகங்களை முன்புறத்திலேயே தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மக்களின் ஆரோக்கியமே முதன்மையானது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது.
இந்த உத்தரவை மத்திய அரசு முறையாகச் செயல்படுத்தத் தவறினால், நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக நலன்களை விட, இந்திய மக்களின் உடல்நலனுக்கே உச்சநீதிமன்றம் முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.



