ஈரான் மீதான பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்குவதாக அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை 'பொருளாதார டி-டே' (Economic D-Day) என்று வர்ணித்த அவர், ஈரான் அரசின் பொருளாதார ஆதாரங்களை முழுமையாகத் துண்டித்து, அந்த நாட்டைத் தனிமைப்படுத்துவதே தங்களின் இலக்கு எனத் தெரிவித்தார்.
ஈரானின் ராணுவத் திறன்கள், ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை அதிபர் டிரம்ப் ஏற்கனவே முறியடித்துவிட்டதாக பெசென்ட் குறிப்பிட்டார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காலம் முடிந்துவிட்டதாகக் கூறிய அவர், வாஷிங்டனின் பொறுமையைச் சோதிப்பவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.




