இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவியர் இளங்கலை உயர்கல்வியைத் தொடர்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை அமைச்சர் ஷாஜஹான் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பேரவையில் அமைச்சர் ஷாஜஹான் அறிவிப்பு





