நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் நிலப்பரப்பு முற்றிலும் மாறியுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உணர்த்துகின்றன. இந்த பாதிப்புகள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
வெள்ளத்திற்கு முந்தைய படங்களில் ஆற்றுப் பாதைகள் இயல்பான நிலையில் காணப்படுகின்றன. ஆனால், வெள்ளத்திற்குப் பிந்தைய படங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதையும், நிலப்பரப்பு முற்றிலும் உருக்குலைந்து போயிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.




