2026-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைப் பேரழிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6,509 பேரும், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 460-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவில் நிலநடுக்கத்தால் 331 பேரும், ஆசியாவில் மேசாக் சூறாவளியால் 160-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். ஜிம்பாப்வேயில் 134 பேரும், கென்யாவில் 112 பேரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் நிலநடுக்கங்களால் முறையே 107 மற்றும் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசில், அமெரிக்கா, வங்கதேசம், மலாவி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் முறையே 73, 70-க்கும் மேற்பட்டோர், 54, 40 மற்றும் 39 பேர் உயிரிழந்துள்ளதாக வேர்ல்ட் விசுவலைஸ்டு (World Visualized) தரவுகள் தெரிவிக்கின்றன.


