தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலாச்சாரம் சார்ந்த விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் தனி விளையாட்டு கோப்பை போட்டிகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. நன்னிலம் தொகுதியில் நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், எடப்பாடியில் உள்ள மினி ஸ்டேடியத்தை மறுகட்டமைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
முன்னதாக, அந்த மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
