தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டிருந்த ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவலை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மீண்டும் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
