பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசுக்குச் சொந்தமான நிலங்களைக் கண்டறிந்து, தகுதியான பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் உறுதியளித்தார்.

