காமராஜரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அரசு இடம் மறுத்ததாகப் பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தெரிவித்தார். காமராஜரின் மறைவின் போது, அவரது உடலை ராஜாஜி அரங்கிற்கு கொண்டு வந்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகளை முன்னின்று நடத்தியவர் கலைஞர் கருணாநிதி என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், காமராஜரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கோரப்படவில்லை என்பதை பழ. நெடுமாறன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதையும் தங்கம் தென்னரசு தனது உரையில் குறிப்பிட்டார்.


