அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அகிரி கிருஷ்ணமூர்த்தி தரப்பு வாதங்களை முன்வைத்தது. ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களிலேயே அமைச்சரை சந்தித்து அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சபாநாயகரின் விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல, அது ஒரு அரசியல் சாசன கடமை என வாதிடப்பட்டது. மேலும், அர்த்தமுள்ள வகையில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
