கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரத்தில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் நினைத்திருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும் என சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் பெருபாரி தீவை கிழக்கு பாகிஸ்தானுக்கு வழங்க மத்திய அரசு முயன்றபோது, அப்போதைய முதலமைச்சர் பி.சி. ராய் உச்சநீதிமன்றம் மூலம் அதனைத் தடுத்ததை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
கலைஞரிடம் இருமுறை தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்டு, அவரது சம்மதத்துடன்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். கேவல் சிங் வந்து பேசியபோது, வழக்குகளைக் கூறி மிரட்டி பணிய வைத்ததாகவும், அந்த மிரட்டலுக்குப் பணிந்து யாருக்கும் தெரியாமல் கலைஞர் ஒப்புக்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
