முதலமைச்சர் விஜய் வரம்பை மீறிப் பேசியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எதிர்க்கட்சிகளை விமர்சித்தபோது, அவை வரம்பை மீறியதாக இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரை என்பது உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும், கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ளவற்றுக்கும் விளக்கம் அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.

