கடந்த 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த கள்ளச்சாராயத்தை தயாரித்தது யார், இதற்கு உடந்தையாக இருந்தது யார், மேலும் கள்ளச்சாராய தயாரிப்பில் காவல்துறையினருக்கு தொடர்பு உள்ளதா அல்லது அவர்கள் இதற்கு துணை நின்றனரா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை விடை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


