சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தனியார் உணவகத்தின் உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறை ரத்து செய்துள்ளது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த தனியார் உணவகத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

