ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து, தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மூன்று தலைமுறைகளாக இப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மறுசீராய்வு மனுவை மாநில அரசு மூலம் தாக்கல் செய்ய வலியுறுத்தி, ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டமாக இது நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்குமாறு அனைத்து பொதுமக்களையும் போராட்டக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1Likes
0Dislikes


