கோயில்களில் விஐபி தரிசனத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, விஐபி-க்களின் வருகையால் பொதுமக்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கோயில் நிர்வாகங்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தருவது குறித்து ஒரு நாள் முன்னதாகவே நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். கோயில் வளாகத்திற்குள் விஐபி-க்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது. மேலும், இவர்களின் வருகையினால் கோயிலின் புனிதத்தன்மை மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்துக் கோயில்களுக்கும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


