போர்கள் மற்றும் மோசமான வானிலை சூழல் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோதுமை, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு இந்த உயர்விற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் உணவு விலை குறியீடு 131.1 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.

