இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தலா 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்; எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பொதுப்பிரிவினருக்கு ரூ.850-ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.iob.bank.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 24, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.



