இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில், இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களிடம் உண்மைகளை மறைத்து நிதி திரட்டியதாகவும் கூறி அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கின் பெரும்பகுதி இந்திய எல்லைக்குட்பட்டது என்பதால், உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக வழக்கை கைவிடுவதாக அமெரிக்க நீதித்துறை கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது.



