தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.48,696 கோடியாக கணக்கிடப்பட்டிருந்தது. இதில் ஓய்வூதியத் திட்டத்திற்கான ரூ.11,000 கோடியும் சேர்க்கப்பட்டிருந்தது என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
ஆனால், ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதியைச் சேர்க்காமலேயே வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக இருப்பதாகக் குறிப்பிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். மூன்று மாத காலத்திற்குள் இவ்வளவு பெரிய வருவாய் பற்றாக்குறை எப்படி ஏற்பட்டது என அவர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.



