இந்தியாவில் போர் விமானங்களுக்கான என்ஜின்களைத் தயாரிப்பதற்காக ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடையும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக இந்தியாவில் என்ஜின் தயாரிப்பு மையத்தை அமைப்பது குறித்து இரு நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவமும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உற்பத்தித் திறனும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்புகள் உருவாகியுள்ளன.



