மாடர்னா மற்றும் மெர்க் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புற்றுநோய் தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி, விரைவில் விண்ணப்பிக்க அந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.


