ஐரோப்பா முழுவதும் நிலவும் வரலாறு காணாத கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக, பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினர் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கடும் வெப்பம் காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்கள் நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





